ஜல்லிக்கட்டு காளை / காளையை அடக்குபவர் பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
மாவட்டத்தைப் பற்றி
தமிழகத்தின் சுதேச அரசுகளில் ஒன்றாக விளங்கிய புதுக்கோட்டை மாவட்டம், அரண்மனைகள், கோட்டைகள், கொத்தளங்கள், குகை ஓவியங்கள் மற்றும் பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றால் நிறைந்த கலாச்சார பாரம்பரியத்தை கொண்டுள்ளது. ஆதி மனிதர்கள் வசிப்பிடமாக திகழ்ந்த இம்மாவட்டத்தின் பல பண்டைய கிராமங்கள் தமிழ் சங்க இலக்கியத்தில் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்கு மாவட்டங்களான திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டு, கிழக்கில் வங்காள விரிகுடாவின் கரையோரப் பகுதிகளால் சூழப்பட்ட இம்மாவட்டம், நில மற்றும் கடல் இயற்கை வளங்களை கொண்டுள்ளது. தமிழக வேந்தர்களால் நிர்மாணிக்கப்பட்ட அரண்மனைகள், கோட்டைகள், கால்வாய்கள் மற்றும் குளங்கள் இம்மாவட்டத்தில் நிறைந்து காணப்படுகின்றன. ஆவுடையார்கோவில் கோயில், குடுமியான்மலை, பிரகதாம்பாள் ஆகிய கோயில்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இசுலாமியர்களின் காட்டுபாவா பள்ளிவாசலும், பழமைவாய்ந்த ஆவூர் கிறிஸ்தவ தேவாலயமும், சமணர்களின் சித்தன்னவாசலும் இம்மாவட்டத்தின் மத நல்லிணக்கத்தை பறை சாற்றுகின்றன. விராலிமலையிலுள்ள மயில்கள் சரணாலயமும், மலைகளிலும் குகைகளிலும் வடிவமைக்கப்பட்ட கோயில்களும் பிரதான சுற்றுலா தலங்களாகும்.

நிகழ்வுகளின் தொகுப்பு
மாவட்டம் – ஒரு கண்ணோட்டம்
பொது:
பரப்பளவு:
மக்கள் தொகை:
உதவி எண்கள்
-
கட்டுப்பாட்டு அறை:1070
-
காவல் கட்டுப்பாட்டு அறை :100
-
ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை :1077
-
விபத்து உதவி எண்: 108